வெள்ளி, 8 மார்ச், 2024

விழித்துக் கொள்கிற கனவு - சர்வதேச மகளிர் தினம் 2024


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  பெண்களின் உரிமைகள், பெண் கல்வி, பாலின சமத்துவம்,  அவர்களுக்கு எதிரான வன்முறைகள், சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தைப் பற்றியும்  விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் பயன்பட்டு வருகிறது.  2024_ஆம் ஆண்டின் மகளிர் தினக் கருப்பொருளாக பெண்களில் முதலீடு: முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்.  இந்த ஆண்டு மகளிர் தினத்தின் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது: ‘பெண்களிடத்தில் முதலீடு - முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துதல்’! பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களது தலைமைத்துவதிற்கு முக்கியம் அளித்தல் இக்கருப்பொருளின் நோக்கமாக உள்ளது.

#1
“பெண்களாக நாம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு 
எல்லையே இல்லை.”
__  Michelle Obama

#2
பெண்களின் அணிகலன்களில் மிக அழகியது அவர்களது தன்னம்பிக்கை. 


#3
“நாங்கள் இப்போது என்னவாக இருக்கிறோமோ, 
இனி எவ்வாறாக முன்னேறுகிறோமோ, அத்தனைக்கும் எங்கள் தேவதையான அம்மாவுக்கே 
கடமைப் பட்டிருக்கிறோம்!”

#4
“உறுதியான அன்னையர்
உறுதியான குழந்தைகளை
வளர்த்தெடுக்கிறார்கள்!”

#5
வெற்றிகரமாக இருப்பதற்கு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை; 
தற்போதைக் காட்டிலும் அதிகமாக முன்னேற முனைந்தால் போதும்.”

#6
“நம்பிக்கை என்பது விழித்துக் கொள்கிற கனவு.”

**
 மகளிர் தின நல்வாழ்த்துகள்!
***

6 கருத்துகள்:

  1. முதல் படத்தில் இருப்பவர் உங்கள் சகோதரியா, திருமதி ஷைலஜா அவர்களா?  படங்களும் வாசகங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படத்தில் இருப்பவர் என் அத்தை மகள். நன்றி ஸ்ரீராம் :)!

      நீக்கு
  2. அனைத்து படங்களும் அருமை.மகளிர் தினத்தில் போட்ட பதிவை பார்க்கவே இல்லை, மன்னிக்கவும். சிந்தனைகள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிம்மா. தவற விடுவது எல்லோருக்கும் நிகழ்வதே. பரவாயில்லை.

      நீக்கு