செவ்வாய், 28 அக்டோபர், 2014

இந்த மனுஷங்களே இப்படித்தான்.. - பெங்களூர் பெரிய ஆலமரம்

3 ஏக்கர் பரப்பில் விரிந்து நிற்கும் 400 வயதான இந்த ஆலமரம் கர்நாடாகத்தில் ரமோஹள்ளி எனுமிடத்தில் உள்ளது.

#1

250 மீட்டர் சுற்றளவிலான இதன் அடிமரம் வியாதி வந்து அரிக்கப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.  ஆனால் ஆயிரத்துக்கும் மேலான விழுதுகள் தாங்கி நிற்கின்றன மரத்தை. போகவும்கிளைகளின் முனைகள் நிலத்தில் வீழ்ந்து விடாதபடி தாங்குக் கட்டைகளை வைத்திருப்பதைக் கீழ்வரும் படத்தில் காணலாம்.

#2

ஒருநாள் சுற்றுலாவுக்கு பெங்களூர் மக்கள் நாடும் இந்த ஆலமரத்தைத் தேடி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

#3

இந்த இடத்தை அடைய பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 28 கி.மீ பயணப்பட்டு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

சிறந்த ஆசிரியர்கள்

 1. தீவிரமான நம்பிக்கை எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.

2. இணைந்து செயலாற்றினால் அதிகம் சாதிக்கலாம்.

3. ஒரு விஷயத்தை நாம் பார்க்கிற விதத்தை மாற்றிக் கொண்டால், பார்க்கின்ற விஷயங்களும் மாறத் தொடங்கும்.


4. ஒருவரைப் பற்றி ஒருவர் புறம் கூறித் திரியாமல்,

செவ்வாய், 21 அக்டோபர், 2014

ஒளிப்படங்கள் இரண்டு.. 2014 கல்கி தீபாவளி மலரில்..

300 பக்கங்களுடன், கோகுலம் மற்றும் மங்கையர் மலர் பக்கங்களையும் உள்ளடக்கி வெளியாகியுள்ள கல்கி தீபாவளி மலரில்.. எனது ஒளிப் படங்கள் இரண்டு..

நன்றி கல்கி!

பக்கம் #194_ல்..

திங்கள், 20 அக்டோபர், 2014

செடிகொடியில் காய்கனிகள்.. - PiT Oct 2014

#1
ஒரு கல்லில் எத்தன மாங்கா..?
இந்த மாத PiT போட்டிக்குப் படங்கள் அனுப்ப இன்றே கடைசித் தினம் ஆகையால், நினைவூட்டிடும் விதமாக இங்கும் ஒரு பதிவு. 

நீங்கள் கேமராவுடன் தோட்டத்துக்கோ, தோப்புக்கோ, சோலைக்கோச் செல்ல வேண்டும். இயற்கை அன்னையின் மடியில் உறங்குபவற்றைத் தொந்திரவு செய்யாமல் படமாக்க வேண்டும். இலை தளைகளுக்குள் ஒளிந்து கொண்டு சிரிப்பவற்றைக் குனிந்து நிமிர்ந்து கண்டு பிடிக்க வேண்டும். சூரியக் குளியலில் ஆனந்தித்திருப்பவற்றை கண்டு ரசித்துக்  காட்சியாக்க வேண்டும்.

தலைப்பு: கொய்யாத காய்கனிகள்” என அறிவிப்புப் பதிவில் சொல்லியிருந்ததென்னவோ நிஜம்தான். ஆனால் அடித்துப் பெய்கிற மழைக்கு நடுவில் எப்படித் தோப்புத் துரவுக்குள் போகட்டும் என்கிறீர்களா? மழை விடும் நேரத்தில் முயன்று பாருங்களேன். காய்கனிகளும் மழையில் நனைந்து பளிச்சென போஸ் கொடுக்கும்:)!

ஒவ்வொரு மாதமும் தலைப்புக்காகப் புதுப்படங்கள் பதிகிற வழக்கத்தில் இந்தப் பதிவிலும் முதல் ஐந்து புதியவை. மற்றவை முன்னர் பல பதிவுகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

#2
இவை என்ன காய் :)?
#3 குட்டைச் செடியில்..


#4 ஒற்றைக் கத்திரி..

வெள்ளி, 17 அக்டோபர், 2014

இம்மாத தமிழ் ஃபெமினாவில்.. எஸ். செந்தில் குமார் பார்வையில்.. “அடைமழை”


சென்ற மாத ஃபெமினாவில் வெளியான அறிமுகத்தைத் தொடர்ந்து இம்மாதம், அக்டோபர் 2014 தமிழ் ஃபெமினாவில்.. அடை மழை நூலுக்கான மதிப்புரையை வழங்கியிருக்கிறார், இதழின் ஆசிரியரான எஸ். செந்தில்குமார்..

செவ்வாய், 14 அக்டோபர், 2014

சனி, 11 அக்டோபர், 2014

ஆறடி நிலம் (நிறைவுப் பாகம்) - நன்றி தினகரன் வசந்தம்!

பாகம் 1 ; பாகம் 2 . பாகம் 3.

புயலாக உள்ளே வந்தாள் ராணி ஜீனத் அவரது குழப்பங்களுக்குத் தீர்வு காண.  “முடிவு செய்து விட்டேன்.  நம் யாரையும் கொல்லக் கூடாதென  பிரிட்டிஷ்காரர்களுடன் பேரம் பேசப் போகிறேன். ஒப்புக் கொண்டால் சரணடைந்து விடுகிறோம் என்று சொல்லப் போகிறேன்” என்றாள். ஏதோ சொல்ல முற்பட்ட அகமதைப் பார்த்து “மகராஜாவின் அனுமதியையே நான் கேட்கவில்லை. கொட்டகையைக் கழுவும் முட்டாள்களின் பேச்சையா கேட்கப் போகிறேன்” சீறினாள் ஜீனத். குனிந்து வணங்கிய அகமது அமைதியாக வெளியேறி விட்டான்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

பெண் எழுத்தாளர்களுக்கான இலக்கியப் பரிசுகள் 2014 - திருப்பூரில் விழா

'இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்புக்கு மு.ஜீவானந்தம் இலக்கியப்பரிசு அறிவிப்பாகியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன்.

பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், பங்கேற்பாளர்கள், நடுவர்கள், பரிசு பெறும் படைப்புகள் ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய விழா அழைப்பிதழையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

# திருப்பூரில்..


# நிகழ்ச்சி நிரல்

கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை ஆகிய பிரிவுகளில் பரிசு பெற்ற படைப்புகள் மற்றும் எழுத்தாளர்கள்..

# கவிதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு

வியாழன், 9 அக்டோபர், 2014

உந்தன் சிரிப்பு - பாப்லோ நெருடா (4)

ன்னிடமிருந்து ரொட்டியை எடுத்துக் கொள்,
உனக்கு விருப்பமானால்
காற்றையும் கூட எடுத்துக் கொள், ஆனால்
உந்தன் சிரிப்பை மட்டும் என்னிடமிருந்து பிரிக்காதே.

புதன், 8 அக்டோபர், 2014

தினகரன் வசந்தம் தொடர்: ஆறடி நிலம் (பாகம் 3)

பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே.

யோசிக்கிறீர்களா மன்னா? சரி. யோசித்து முடிவு சொல்லுங்கள். அதுவரை இங்கேயே நிற்கிறேன்” என்றான் மிர்ஸா பணிவாக.  தப்பிக்க வழியில்லை.

“முடிவா? எந்த மனிதனாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. நானும் அப்படியே. நடக்க வேண்டியவை நடக்க வேண்டிய தருணத்தில் நடந்து விடுகின்றன.” இரண்டு கைகளையும் உயரத் தூக்கிச் சொன்னார். ‘என்ன அற்புதமான பதில்’ எழுந்த சந்தோஷத்தைக் காட்டிக் கொள்ளாமல் “மேலும் என்னைத் தலைவனாக்க விரும்பும் அந்த சிப்பாய்களோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லை” உதட்டைப் பிதுக்கி, தோள்களை உயர்த்திக் கைவிரித்தார் ஜாஃபர்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இலக்கியப் போட்டி 2014_ல் பரிசு

“இலைகள் பழுக்காத உலகம்” கவிதைத் தொகுப்புக்கு மற்றுமொரு விருது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2014-ல்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும்  நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும், தேர்வுக் குழுவினருக்கும், வெளியிட்ட அகநாழிகை பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்!

பல பிரிவுகளில் நடைபெற்றப் போட்டியில் பரிசு பெற்ற நூல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களும், விழா நிகழ்வு குறித்தத் தகவல்களும்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin