ஞாயிறு, 27 ஜூலை, 2014

ஆயிரம் தட்டான்களும் அயல்நாட்டு ஆவணப்படமான வெற்றிக் கதையும் - கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 3)

 பாகம் 1 இங்கே; பாகம் 2 இங்கே

#1
ராளமான ஏரிகளைக் கொண்ட பெங்களூரில் சொல்லிக் கொள்ளும்படியான பராமரிப்புடன் இருப்பவை வெகு சொற்பமே. இவற்றிலும் சீர் செய்யப்பட வேண்டிய பிரச்சனைகள் பல இருந்தாலும் ஓரளவு மக்கள் பயன்படுத்தும் நிலையில், பறவைகள் தேடி வரும் வகையில் உள்ளன. இவை போக கவனிப்பாரற்றுக் கிடக்கிற மற்ற பல ஏரிகளைப் போலவே மாசடைந்து, கிட்டத்தட்ட ஒரு குப்பைக் கிடங்கை ஒத்ததாகவே இருந்தது கைகொண்டனஹள்ளி ஏரியும் 2009 ஆண்டு வரையிலும்.

#2

வெள்ளி, 25 ஜூலை, 2014

புதிய பாதை

1.  ஒவ்வொரு படியிலும் நின்று ஒவ்வொருவருக்கும் நம்மை நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது. செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

2. நாம் மாறிவிட்டதாக எவரும் சொன்னால், நம் வாழ்க்கையை மற்றவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்வதை நிறுத்திக் கொண்டோம் என்று அர்த்தம்.

3. எல்லாம் மிகச்சரியாகச் சென்று கொண்டிருந்தாலே மகிழ்ச்சி கிட்டும் என்றில்லை. சரியற்றவற்றைத் தாண்டிப் பார்க்கவும், கடக்கவும் நாம் எடுக்கிற முயற்சியிலும் முடிவிலும் கூடக் கிடைக்கிறது மகிழ்ச்சி.

சனி, 19 ஜூலை, 2014

சந்தோஷமும் சமாதானமும்

#1 பால் போலவே..
வெள்ளை நிறம் அமைதிக்கும் சமாதானத்துக்குமான அடையாளம் என்றால் மஞ்சள்  சந்தோஷத்துக்கும் வளமான வாழ்வுக்குமான அடையாளம்.

வெள்ளி, 11 ஜூலை, 2014

வாழுங்கள்.. வாழ விடுங்கள்.. - பெங்களூர், கைக்கொண்டனஹள்ளி ஏரி (பாகம் 2)

பாகம் 1 இங்கே
பெங்களூரில் கைக்கொண்டஹள்ளி கிராமத்தில், சர்ஜாப்பூர் பிரதான சாலையைப் பார்த்து 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து இருக்கிறது கைகொண்டனஹள்ளி ஏரி. ஒரு சிலவருடங்களுக்கு முன் வரையிலும் மாசடைந்து, பாசிகள் படர்ந்து, குப்பைகளைக் கொட்டும் இடமாக இருந்து வந்த ஏரி இன்று பெங்களூரின் பிற ஏரிகளின் சீரமைப்புக்கு உதாரணமாகக் கைகாட்டப் படுவதோடு உலகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

#1
உடற்பயிற்சிக்காக, ரிலாக்ஸ் செய்து கொள்ள என ஏரிக்கருகே இருக்கும் பெலந்தூர் மக்கள் மட்டுமின்றி பெங்களூரின் பலபாகங்களிலிருந்தும் மக்கள் இந்த ஏரியைத் தேடி வருவதற்கு இன்னொரு காரணம் பறவைகள். வாத்து வகைகள் போக, சீரமைப்புக்குப் பிறகு காலை மாலை வேளைகளில் வரும் பறவைகளைக் கண்டு இரசிக்க பறவை நேசர்களும் புகைப்பட ஆர்வலர்களும் கூடி விடுகிறார்கள். 

#2

என் 200mm லென்ஸுக்கு சிக்கிய சில பறவைகளோடு, படங்கள் பதினேழை இந்தப் பாகத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

#3 Heron

செவ்வாய், 8 ஜூலை, 2014

நதியில் என் ஓடம்

த்தனை ஆயிரம் இரவுகளோ அறியேன்
ஓடும் நதியில்
ஓடத்தில்
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.
அழகிய சோலைகளின் பக்கம்
அமைதியில் உறைந்த வனங்களின் பக்கம்
இறங்குவேன் என்றெண்ணி
ஓடம் கரை தொட்டு நின்ற கணங்களை
கவனிக்கத் தவறி
உறங்கிக் கொண்டிருக்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin