ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவு விழா - இன்று சென்னையில்..



நாளொன்றுக்கு 1,75,000 முறைகளுக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியா படிக்கப்படும் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்து ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காகப் பல நாடுகளைச் சேர்ந்த இத்திட்டத்தின் பங்களிப்பாளர்கள் சென்னையில் ஒன்றுகூட இருக்கிறார்கள்.

கட்டற்ற கலைக்களஞ்சியமாக மனித அறிவு முழுமையடைய எந்த இலாப நோக்கமுமின்றி கூட்டு முயற்சியில் இயங்கி வரும் விக்கிப்பீடியாவின் தமிழ் பதிப்பு 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பத்தாண்டு நிறைவுவிழா இன்று காலை 09.00 மணி முதல் 05.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி வளாகம், டாக் (TAG) அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிறைவுவிழாஅறிக்கையிலிருந்து மேலும் சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு:

சனி, 28 செப்டம்பர், 2013

வார்த்தைகளற்றக் கவிதைகளும் வடித்த பிரம்மாக்களும் - பெங்களூர் சித்திரச் சந்தை 2013 (பாகம் 6)

"வார்த்தைகளால் சொல்ல முடியுமாயிருந்தால் நான் ஓவியம் தீட்ட வேண்டிய அவசியமே இல்லை” என்றவர் அமெரிக்க ஓவியர் எட்வர்ட் ஹாப்பர். “படம் என்பது வார்த்தைகளற்ற கவிதை” எனக் கொண்டாடியவர் ரோமானியக் கவிஞர் ஹொராஸ். மறுக்க முடியுமா? வாருங்கள், அப்படியான கவிதைகள் சிலவற்றோடு அவற்றைப் படைத்தவர்களையும் பார்க்கலாம்:

#1 ஞாபகம் வருதே..

#2 ஜல் ஜல்..

 சந்தையிலிருந்து கருக்கலில் வீடு திரும்பும் காட்சி.
படங்கள் 1,2-ல் சக்கரங்கள் கிளப்பும் புழுதியை அருமையாக வரைந்திருக்கிறார்.

#3 ஏர் உழவன்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

புலி வருது.. புலி வருது..

நான் எடுத்த படங்கள் ஏழு, புலி பற்றிய சிறு குறிப்புகளுடன்...

#1

புலி, ‘பாந்தெரா தீகிரிஸ்’ (Panthera tigris) எனும் பூனையினத்தைச் சேர்ந்தது. பாந்தெரா இனத்தின் நான்கு "பெரிய பூனையினங்களில்" இதுவே மிகப் பெரியது.

பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா.

இந்தியா, பாக்கிஸ்த்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மியன்மர் பகுதிகளில் காணப்படுபவை வங்காளப் புலி அல்லது இராயல் பெங்கால் புலி (Panthera tigris tigris).

#2
உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானவை.

பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடம்பெற்றுள்ளன.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வலி - நவீன விருட்சத்தில்..

தேநீர் விருந்தொன்றில் சந்தித்தேன்
அந்த இளைஞர்களையும் யுவதிகளையும்.

இன்முகத்தோடு வேலைகளை
இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.
வேடிக்கைப் பேச்சால்
விருந்தினர்களைக் கவர்ந்தார்கள்.

“பக்கத்தில் குடிவந்திருக்கிறார்கள்
புலம் பெயர்ந்தவர்கள்”

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

நடனம், நாட்டியம், நாட்டுப்புற ஆடற் கலைகள்

தாளத்துக்கும் இசைக்கும் தொடர்புடைய ஒரு கலையை உங்கள் ரசனையில், பார்வையில் காண விரும்புகிறது இம்மாத PiT போட்டி.

ஆம். ‘நடனம்’தான் தலைப்பு.

ஒரு சமூகத்தின் பண்பாட்டைச் சார்ந்து ஒவ்வொரு நடனமும் ஒவ்வொரு வகையான நெறிமுறைகளையும் நுணுக்கங்களையும் கொண்டிருக்கின்றன. நாம் கண்டு இரசித்துக் காட்சிப் படுத்தியவற்றிலிருந்தோ அல்லது புதிதாக களமிறங்கிப் படமெடுத்தோ பகிர்ந்திட ஒரு வாய்ப்பு.
#1
(இவை யாவும் P&S கேமராவில் படமாக்கிய இரவுக் காட்சிகள்)

திங்கள், 9 செப்டம்பர், 2013

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! - பெங்களூர் சித்திரச்சந்தை 2013 (பாகம் 5)

ஓவியக் கலைஞர்கள் கைவண்ணத்தில் வினை தீர்க்கும் விநாயகரின் சித்திரங்கள் ஏழு:

#1. சர்வ பூஜ்யர்

எங்கும் எத்தகைய பூஜைகளிலும், எல்லா தெய்வ வழிபாட்டின் போதும் முன்னதாக பூஜிக்கப்படக்கூடியவர். எல்லோராலும் வணங்கப்படுபவர்.
#2.தரணிதரன்

பூமியை ஆபரணமாக அணிந்து எப்போதும் காப்பவன்.

சனி, 7 செப்டம்பர், 2013

தங்க மீன்கள்

#1. அன்புப் பிடி

பத்திரிகைகள் பாராட்ட, பார்த்தவர்கள் பரிந்துரைக்க வெற்றி நடை போட்டு வருகிறது ‘தங்க மீன்கள்’ திரைப்படம். இயக்குநர் ராம் இத்திரைப்படத்தின் தலைப்புக்காக ஒரு ஒளிப்படப் போட்டி அறிவித்திருந்தார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா அவர்களின் தேர்வில் போட்டி முடிவு சமீபத்தில் அறிவிப்பானது. வெற்றி பெற்றவர் நாமெல்லாம் நன்கறிந்த நண்பரும், புகழ் பெற்றப் புகைப்படக் கலைஞருமான..

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பெயரற்றவன் - ரிச்சர்ட் ரைட் ஆங்கிலக் கவித்துளிகள்


1.
ஏனிந்த வசந்தகாலத்து வனம்
மெளனத்துள் ஒளிகிறது நான் வருகையில்?
என்னதான் நடக்கிறது?

2.
நகரின் எல்லா மணிகளும்
ஓங்கி ஒலிக்கின்றன நள்ளிரவில்
புது வருடத்தை பயமுறுத்தி!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin