பெங்களூரில் மெட்ரோ திட்டத்துக்காக நாலாயிரத்துக்கும் மேலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதாக காற்று வாக்கில் செய்திகள் உலவினாலும் அரசு தரப்பு அதை மறுக்கிறது. முன் எப்போதையும் விடக் கொதிப்பாக அமைந்த இவ்வருடக் கோடை ‘நானே போதாதா ஆதரத்துக்கு’ என அச்சுறுத்திச் சென்று விட்டது. பெங்களூரின் வெதருக்காகவே முற்றுகையிட்ட பன்னாட்டு நிறுவனங்களால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க, ஜனத்தொகை பெருக, அதற்கேற்ற வகையில் சாலை விஸ்தரிப்புகளும் மேம்பாலங்களும் தற்போது மெட்ரோவும் தேவைப்பட கடைசியில் இழந்தது கார்டன் சிட்டி தன் அடையாளத்தை.
காட்டை அழித்து நாடாக்குவதும் வயலை அழித்து வீடாக்குவதும் தொடருகிற வேளையில் வந்திருக்கும் PiT தலைப்பு ‘
பச்சை’. பசுமை. மனதுக்குக் குளுமை.
"படத்தில் பச்சை பிரதானமா இருக்கணும். அது மரமா இருக்கலாம், இலையா இருக்கலாம், உடையா இருக்கலாம், ப்ளாஸ்டிக் குடமா இருக்கலாம், பெயிண்ட் டப்பாவா இருக்கலாம், வாகனமா இருக்கலாம், இதுவா இருக்கலாம், அதுவா இருக்கலாம், கிளிப்பச்சையா இருக்கலாம், ஆலிவ் பச்சையா இருக்கலாம். மொத்தத்துல பச்சையா இருக்கணும்."
இப்படியாக PiT அறிவித்திருந்தாலும் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகுசிலரைத் தவிர மற்றவர் எல்லாம்..
‘புல்லின் சிரிப்பு பச்சை நிறமே
இலையின் இளமை பச்சை நிறமே’
எனக் களத்தில் இறங்கி விட்டார்கள், பாருங்கள்
இங்கே :)!
[படங்கள் கணினித் திரையை விட்டு விலகித் தெரிந்தால் Ctrl மற்றும் minus பொத்தான்களை உபயோகித்திடக் கேட்டுக் கொள்கிறேன்.]
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா!

அடர் பச்சைக் கானகத்தில் தனிப்பச்சையாய்..

தண்ணீரின் நிறமும் பாசிப்பச்சையாய்..
வயலும் வாழ்வும்

பச்சைப் பசேல்

கன்று ஒன்று

பசு ஒன்று

பசும்புல் சுவைத்தபடி..
பசுமை நிறைந்த நினைவுகளே..

"பாடித் திரிந்த பறவைகளே.. பழகிக் களித்த தோழர்களே..
பறந்து செல்கின்றோம்.. நாம்.. பிரிந்து செல்கின்றோம்.." என 82-ல் விடைபெற்ற இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளிக்கு சமீபத்திய நெல்லை விஸிட்டின் போது சென்றிருந்தேன். (அது பற்றியொரு பதிவு எழுத எண்ணம் உண்டு). சீருடை வண்ணமாகிய ‘பச்சை’ வெள்ளையைத் தன்னிலும் தாங்கி நிற்கறது பள்ளி அலுவலகம் இயங்கும் இந்தப் பிரதான கட்டிடம். நேர் மேலே சேப்பல்:

சன்னல்களின் பச்சை டின்டட் கண்ணாடி வழியே பாய்ந்து பரவி நிற்கும் இந்தப் பசும் ஒளி சின்ன வயதிலிருந்து ரொம்பப் பிடிக்கும். அமைதியான சூழலை இன்னும் ஆழமாக்குகிறது அந்த ஒளியெனத் தோன்றும். அதற்காகவே அடிக்கடி செல்லுவேன் அப்போது. பள்ளியினுள் பல மாற்றங்களைக் கண்டாலும் இந்த சேப்பல் அன்று கண்டது போல அப்படியே இருப்பது கண்டு வந்தது ஒரு பரவசம்.
மலர்களின் கானமும் மரங்களின் மயக்கமும்

மார்கழி பஜனையில் சிலிர்த்து நிற்கும் நெட்டிலிங்கங்கள்
எங்கெங்கு காணினும் பசுமையடா..

சோலை வனம்

மலர் வனம்

பூங்கா வனம்

ஏரிக்கரையோரம் தேநீர் நேரம்

துள்ளாத மனமும் துள்ளும்

இப்படியொரு back yard அமைந்தால்..
A Country House

தளிரும் மரமும்

பசுஞ்சோலையில் நிற்கும் பச்சிளம்பாலகன்
இவன் தலைமுறைக்காக..
விட்டு வையுங்கள் மரங்களை!
இருந்த பச்சைகளில் சிலவற்றைத் தேற்றிப் பார்வைக்கு வைத்திருக்கிறேன்.
இருத்தலின் அடையாளமாக எதைக் கொடுக்கட்டும் என நேரமிருந்தால் சொல்லிச் செல்லுங்கள். முதல் மூன்றில் ஒன்று என்பது என் எண்ணமாக உள்ளது:)!